Monday, April 13, 2009

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மீண்டும் சவுதி

சுமார் 11 மாதங்கள் கழித்து மீண்டும் சவுதி அரேபியாவில் வேலை. இந்த முறை தலை நகரம் ரியாதில். படித்த படிப்பு தொடபான வேலை. அதுவும் 22 வருடம் கழித்து(என்ன கொடுமை சார் இது என்று ப்ரேம்ஜி கூவுரது எனக்கு மட்டும் கேக்குது)

ஆஹா இந்த தமிழ்ல எழுதறதே எவ்வளவு சுகமா இருக்கு. இத்தனக்கும் நா தங்லீழ்லதான் எழுதறேன். அது எவ்வளவு அழகா தமிழிலே மாறுது, சும்மா சொல்லக்கூடாது.மனுஷன் மூளை என்னமா வேலை செய்யுது.

என் வலை உலக நண்பர்களே, எல்லாம் சௌக்கியமா?. உஙளை எல்லாம் சந்தித்து எவ்வளவு நாள் ஆச்சு! கீதா மாமி சாம்பசிவம் மாமா எப்படி இருக்கீங்க? அம்பிக்கு பிரமோஷன் கெடைச்சுதா(ஆபீஸ்லயோ இல்லை வீட்டுலயோ) நாகை புலி சிவா எந்த காட்டுல இருக்காரு. தமிழ் சீரியல்னா பரவால்ல, ஒரு வருழம் கழிச்சு பாத்தாலும் புரிஞ்ஜுக்கலாம்.

ஆகவே, எல்லாரும் என் வலையில் வந்து விழுந்து விஷயத்த சொல்லுங்கோ. சரி நா திரும்பி வந்த விஷயத்த எப்படி எல்லாருக்கும் தெரியப்பாடுத்தறது? என் தானை தலைவி கீதா மாமியிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்து விடைபெறுகிறேன்

No comments: